- ராகவன் (லண்டன்)
(இலங்கை
தலித் சமூக
மேம்பாட்டு
முன்னணியினரால்
இரு நாட்கள் ( 20 –
21ஃ10ஃ2007) பிரான்ஸ்
- பாரிசில்
நடத்தப்பட்ட
முதலாவது
தலித்
மாநாட்டில்
முதல் நாள்
அமர்வில்
வாசிக்கப்பட்ட
கட்டுரை.)
“நீங்கள்
உங்களை ஒரு
தேசம் எனக்
கருதுவது
வெறும் பிரமை.
பல்வேறு
சாதிப்
பிரிவினைகள்
கொண்டவர்கள்
தங்களை ஒரு
தேசம் என்று
அழைக்க என்ன
அருகதை
இருக்கிறது?
நிலவி வரும்
சமூக ஒழுங்கை
மாற்றாத வரை
நீங்கள்
எவ்வித
முன்னேற்றமும்
அடையப்
போவதில்லை.
சாதியக்
கட்டமைப்பிலிருந்து
நீங்கள் எதனை
உருவாக்கினாலும்
அது
இறுதியில்
உடைந்துதான்
போகும்” -
அம்பேத்கர்
இந்தக்
கட்டுரையின்
நோக்கம்
இன்று இலங்கை
அரசியலில்
ஆதிக்கம்
செலுத்தும்
இன –
தேசியவாதச்
சிந்தனை
முறைமையைக்
கேள்விக்குள்ளாக்குவதும்
தலித்
பிரக்ஞைக்கும்
தேசியவாதக்
கருத்தியலுக்குமுள்ள
தீர்க்கப்பட
முடியாத
முரண்பாடுகளை
அடையாளம்
காண்பதுமாகும்.
தமிழ்த்
தேசியவாதக்
கருத்தியல்
யாழ்ப்பாணத்திலேயே
அரும்பி
வேர்விட்டு
விருட்சமாகியதால்
யாழ்ப்பாணச்
சாதிய
அமைப்பு
முறையையும்
ஒடுக்கும்
சாதியினரின்
ஆதிக்கத்தையும்
அதன் அரசியல்
அதிகார
வேட்கையையும்
பற்றி
மட்டுமே
இந்தக்
கட்டுரை
ஆராய்கிறது.
தமிழத்
தேசியவாதம்
குறுகிய
நோக்கம்
கொண்டது. அது
தமிழர் என்று
தான்
வரையறுக்கும்
மனிதர்
அல்லது மனித
குழுவினர்
அல்லாதவரை
அந்நியராக,
விரோதியாகக்
கருதுகின்றது.
தேசியவாதத்திற்கு
உலகளாவிய
பார்வை
கிடையாது. அது
தன்னைத் தான்
கற்பனை
பண்ணும்
பிரதேசத்திற்குள்
குறுக்கிக்
கொள்கிறது.
பிறப்பையும்
பாரம்பரியத்தையும்
மொழியையும்
கலாச்சாரத்தையும்
தனது
அடையாளத்திற்கான
கருப்பொருட்களாகக்
காண்கின்றது.
தமிழ்த்
தேசியவாதம்
சாதிய
அடிப்படையிலான
சமூக -
கலாச்சாரக்
கூறுகளைத்
தன்னகத்தே
கொண்டிருக்கிறது.
ஏனெனில் அதன்
அடிப்படை
பிறப்பு,
இரத்த உறவு,
பாரம்பரிய
நிலம் போன்ற
சாதியக்
கருத்து
நிலைகளே.
பிறப்பு உனது
முற்பிறப்பில்
செய்த நன்மை
தீமைகளால்
நிச்சயிக்கப்படுகிறது
என்ற சனாதன
சைவக்
கோட்பாட்டால்
நியாயமாக்கப்படுகிறது.
இதுவே
சாதியின்
அடிப்படை என
வேதம்
சொல்கிறது.
இரத்தம்
தூய்மையானது,
அது மற்ற
சாதிகளுடன்
கலந்தால்
அழுக்காக
போய்விடும் -
இங்கு
இரத்தம்
என்பது
விந்தும்
சேர்ந்தது -
என்கிறது.
சாதியவாதத்தின்
இதே
அடிப்படையைத்
தமிழத்
தேசியவாதமும்
கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவனுக்கு
நிலம்
சொந்தமில்லை.
எனவே
பாரம்பரிய
நிலம் என்பது
ஆதிக்கசாதியினரின்
நிலங்களேயாகும்.
‘தலித்’
என்ற
பதத்திற்கு
நசுக்கப்பட்ட
மக்கள்
அல்லது
நொருக்கப்பட்ட
மக்கள்
என்பது
பொருளாகும்.
மக்களைப்
பிறப்பின்
அடிப்படையில்
சாதிகளாக
அடையாளப்படுத்தும்
ஆதிக்கசாதிச்
சனாதனிகளால்
தங்கள்மீது
திணிக்கப்பட்ட
பஞ்சமர்,
அவர்ணர்,
இழிசனர்,
தீண்டத்தகாதோர்,
அரிசனர்
போன்ற
சொல்லாடல்களைத்
தலித்தியம்
உறுதியாக
நிராகரிக்கிறது.
இந்தச்
சாதியச்
சொல்லாடல்கள்
தங்களை
இழிவுசெய்ய
ஆதிக்கசாதியினரால்
உருவாக்கப்பட்டவையெனத்
தலித்தியம்
கருதுகிறது.
1972ம் வருட
தலித்
பாந்தர்களின்
(Dalit Panthers) அறிக்கை
பின்வருமாறு
கூறுகிறது:
“தாழ்த்தப்பட்டவன்,
நவீன புத்த
மதத்தவன்,
தொழிலாளி,
கூலி விவசாயி,
பெண்,
அரசியலிலும்
பொருளாதாரத்திலும்
சுரண்டப்பட்டவர்கள்
போன்றவர்கள்
தலித்கள்.
தலித்கள்
கடவுளை
நம்புவதில்லை.
மறுபிறவியையும்
நம்புவதில்லை.
ஏற்றத்
தாழ்வுகளைக்
போதிக்கும்
புனித
நூல்ளைத்
தலித்கள்
நிராகரிக்கிறார்கள்.
அவர்கள்
விதியை
நம்புவதில்லை.
ஏனெனில் இந்த
கருத்தாக்கங்கள்
தான் அவர்களை
அடிமையாக்கின.”
தலித்தியம்
தமிழத்
தேசியத்தின்
அடிப்படைக்
கருத்தியலை
கேள்விக்குள்ளாக்குகிறது.
‘சாதி
அடிப்படை
பிறப்பாலானது’
என்ற சனாதன
சைவ வேளாள
ஆதிக்கசாதிக்
கருத்தியலை
மறுதலிப்பதன்
மூலம் அது
பிறப்பால்
தமிழன் என்ற
தேசிய
அடித்தளத்தையே
தகர்க்கிறது.
தமிழ்மொழி
சாதியக்
கூறுகளை
கொண்டிருப்பதை
அம்பலப்படுத்தித்
தமிழ்
பேசுபவன்,
தமிழன் என்ற
தேசிய
அடையாளத்தையே
நிர்மூலமாக்குகிறது.
நிலம்
மறுக்கபட்ட
மனிதனின்
பாரம்பரியப்
பிரதேசம்
எங்கே
இருக்கின்றதெனக்
கேள்வியெழுப்பித்
தாய் நிலக்
கோட்பாட்டை
கேள்விக்குள்ளாக்குகிறது.
கோயிலுக்குள்
அனுமதிக்கப்படாத
மக்களை,
அடிமையிலும்
இழிவாக
நடத்தப்படும்
மக்களைத்
தமிழ்
கலாச்சார
ஒற்றை
அடையாளத்திற்குள்
திணிக்கப்பதைத்
தலித்தியம்
எதிர்க்கின்றது.
மாறாக
தலித்தியம்
தன்னை
ஒடுக்கப்பட்டவர்கள்,
தாழ்த்தப்பட்டவர்கள்,
அரசியல் -
பொருளாதாரச்
சுரண்டல்களிற்க்கு
ஆட்பட்டவர்கள்
போன்ற
விளிம்புநிலை
மக்களுடன்
தன்னை
அடையாளப்படுத்துகிறது.
எனவே
அதற்குகொரு
உலகளாவிய
தத்துவப்
பார்வை
இருக்கிறது.
அடையாளம்
என்பது
நித்தியமானது
என்பதைத்
தலித்தியம்
மறுதலிக்கிறது.
நிலப்பிரபுத்துவத்தின்
அழிவோடு சாதி
ஏற்றத்தாழ்வுகள்
மறைந்துவிடும்
என்ற படிமுறை
வளர்ச்சி
அடிப்படையிலான
மரபு
மார்க்ஸியவாதத்தையும்
தலித்தியம்
நிராகரிக்கின்றது.
தமிழத்
தேசியவாதம்
தாழ்த்தப்பட்ட
மக்களின்
போராட்ட
வரலாறுகளை
இருட்டடிப்பு
செய்து தேசிய
விடுதலைப்
போராட்டத்தின்
வரலாறே
இலங்கையின்
வடக்குக்
கிழக்கு
வரலாறு எனத்
திரிக்கிறது.
‘சிறுபான்மைத்
தமிழர்
மகாசபை’, ‘தீண்டாமை
ஒழிப்பு
வெகுசன
இயக்கம்’
போன்றவை
இயங்கியதையும்
தலித்கள்
தமிழீழப்
போராட்டம்
தொடங்குவதற்கு
முன்னதாகவே
ஆலயப்
பிரவேசப்
போராட்டம்,
உணவகங்களில்
சமவுரிமைப்
போராட்டம்,
பாடசாலைகளில்
அனுமதிக்கான
போராட்டம்
போன்ற பல
போராட்டங்களில்
ஈடுபட்டனர்
என்பதையும்
அவர்கள்
யாழ்ப்பாண
ஆதிக்கசாதி
வெறியர்களின்
வன்முறைகளிற்கும்
கொலைகளிற்கும்
ஆளானார்கள்
என்பதையும்
தமிழத்
தேசியம்
மறைக்கின்றது.
1958 - 1977- 1983 இன
வன்முறைகளைத்
தனது
ஒடுக்கப்பட்ட
வரலாற்றின்
அத்தியாயங்களாகக்
காட்டும்
தமிழ்
தேசியவாதம் 1944ல்
ஒரு தலித்
மூதாட்டியின்
உடலை
வில்லூன்றிச்
சுடலையில்
தகனம் செய்ய
முயன்ற முதலி
சின்னத்தம்பி
என்ற ஒரு
தலித்தை
வெள்ளாளர்கள்
சுட்டுக்
கொன்றதையும்
சங்கானைப்
போராட்டத்தில்
சின்னர்
காத்திகேசுவைக்
கொன்றதையும்
இன்னும்
பலபத்துச்
சாதியப்
படுகொலைகளையும்
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு
மேல்
நூற்றாண்டுகளாக
நிகழ்த்தப்பட்ட
வன்முறைகளையும்
குறித்துக்
கள்ள மௌனம்
சாதிக்கிறன்றது.
1960களில் ஆலயப்
பிரவேசம்
மேற்கொண்ட
தாழ்த்தப்பட்ட
மக்களின்
மேல்
நிகழ்ந்தப்பட்ட
சாதிவெறி
வன்முறைகள்
பற்றியும்
அது வாய்
திறக்க
மறுக்கிறது.
சாதிய
ஒடுக்குமுறை
குறித்துப்
பேசினால்
தமிழத்
தேசியத்தின்
அரசியல்
வீச்சு
அற்றுப்போய்விடுமென்பதே
எதார்த்தம்.
தமிழ்
தேசியவாதக்
கருத்தியல்
சாதிய
கூறுகளிலேயே
கட்டப்பட்டிருக்கிறது.
சாதியத்தை
ஒழிப்பதற்கான
நடவடிக்கைகள்
அதன் தேசிய
இருப்புக்கு
ஆபத்தாக
வந்துவிடும்
என்பதில்
தமிழ்த்
தேசியவாதம்
கவனமாகவே
இருக்கின்றது
என்பதை அதன்
நடவடிக்கைகளும்
சாதியக்
குணாம்சமும்
நமக்குக்
காட்டுகின்றன.
சாதி
சமயமற்ற ‘சோசலிசத்
தமிழீழம்’
வெறும்
காகித்ததில்தான்.
தாயகத்தை
மீட்ட பின்பு
ஈழத்தில்
சாதியற்ற
சமத்துவம்
நிலவும்
என்பதைத்
தலித்தியம்
அப்பட்டமான
ஏமாற்று
வித்தையாகவே
கருதுகின்றது.தமிழ்த்
தேசியவாதம்
இன
அடிப்படையிலானது.
அது மொழி,
கலாச்சாரம்
என்ற இரு
முதன்மைக்
கருதுகோள்களிற்குள்
தன்னை
வரையறுக்குகிறது.
தமிழ்
தேசியவாத
கருத்தியல்
தமிழினம்
தனக்கென்று
தனித்த
இயல்புகளை
கொண்டிருப்பதாலும்
அவர்கள் மொழி,
கலாச்சாரத்தால்
ஒன்றுபட்டிருப்பதாலும்
தமிழினம்
என்பது கல்
தோன்றி மண்
தோன்றா
காலத்திலிருந்து
மாறாமல்
நிரந்தரமாக
இருக்கிறதென்றும்
இந்த மாறாத
இயல்பே
அவர்களை
அய்க்கியப்படுத்தி
அவர்களுக்கான
ஒரு கூட்டான
உள்ளுணர்வை
கொடுப்பதாகவும்
தங்களை
ஒருங்கிணைக்கும்
உள்ளுணர்வே
தங்களது
இருப்பைத்
தேசமாக உணர
வைக்கிறது
என்கிறது
தமிழ்
தேசியம்.
இந்தக்
கருத்தியலை
நிலை
நாட்டுவதற்கு
கதைகள்,
புராணங்கள்
இலக்கியங்களைத்
தமிழ்
தேசியவாதம்
ஆதாரமாக
காட்டுகிறது.
தமிழரின்
அரசுகள்
முன்னர்
தனியாக
இருந்ததாகவும்
அபகரிக்கப்பட்ட
தேசத்தின்
இறைமையை
மீளவும் நிலை
நாட்டுவதே
தமிழரின்
கடமை என்று
அது
முழங்குகிறது.
“மாறாத்
துயிலில்
ஆழ்ந்த
அழகியின் (Sleeping beauty)
இளமையின்
மாறாத்தன்மை
போன்று
உருவகிக்கப்படும்
நித்தியமான
கலாச்சாரம்
ஆய்வுக்கு
உள்ளாக்கப்படும்
போது
அடிபட்டுப்
போகின்றது”
என்பார்
ஸ்டுவட் கால் (Stuard
Hall) .
தமிழ்த்
தேசியவாதக்
கருத்தியல்
இந்த
அடிப்படையிலேயே
தன்னை
உருவகம்
செய்கின்றது.
தமிழின் இளமை,
தொன்மை, தமிழ்
கலாச்சாரத்தின்
நித்தியம்
ஆகிய
சாராம்சவாதங்களையே
தமிழ்த்
தேசியவாதம்
முன்
வைக்கிறது.
ஆனால்
தேசியக்
கருத்தியலானது
நவீனகால
உருவாக்கமென்பதையே
ஆய்வுகள்
நமக்குக்
கூறுகின்றன.
தேசியவாதக்
கருத்தியல்
என்பது ஒரு
குறிப்பிட்ட
சமூகத்தின்,
வர்க்கத்தின்
அபிலாசைகளை
அடைவதற்கான
அரசியல்
வடிவமே. இந்த
அரசியல்
அதிகாரத்தை
அடைவதற்கான
கருத்தியல்
பரிமாணத்தைத்
தமிழ்
தேசியவாதம்
மொழி,
கலாச்சாரம்
ஆகிய
கருத்துருக்கள்
மூலமாக
வடிவமைக்கிறது.
“சமுக ஏற்றத்
தாழ்வுகளையும்
சுரண்டலையும்
மறைத்து
அனைவரும்
ஒன்று என்ற
மாயையைத்
தேசம்
கொடுப்பதால்
தேசியம் ஒரு
கற்பிதம்”
என்பார்
அண்டர்சன்.
பண்டைய
தமிழ்
இலக்கியங்களிலோ
புராணங்களிலோ
‘தமிழன்’ என்ற
சொல்லாடல்
இருப்பதை
யாராவது
கண்டு
பிடித்தால்
தமிழ்த்
தேசியம் கல்
தோன்றி மண்
தோன்றாக்
காலத்தது
என்பதை நாம்
ஒத்து
கொள்ளத்தான்
வேண்டும். ‘தமிழன்’,
‘தமிழச்சி’
அல்லது ‘தமிழர்’
என்ற
சொல்லாடலகள்
சங்க
இலக்கியங்களிலோ
பக்தி
இலக்கியங்களிலோ
தேவார
திருவாசகங்களிலோ
கிடையவே
கிடையாது. ‘தமிழ்’
என்ற
சொல்லாடல்
மொழியைக்
குறிக்கச்
சில
இடங்களில்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் ‘தமிழர்
‘என்ற இன
அடையாளப்படுத்தல்
சங்க
இலக்கியங்களிலோ
காலனித்துவத்துக்கு
முன்வந்த
பனுவல்களிலோ
இல்லை. ஆனால்
சாதி பற்றி
பல்வேறு
இடங்களில்
சொல்லப்பட்டிருக்கிறது.
புறனானூறில்
அந்தணர்,
குறவர்,
வேந்தர்,
குடிகள்
போண்ற
சொற்கள்
பயன்படுத்தப்
பட்டிருக்கின்றன.
இது மேலதிக
ஆய்வுக்கு
எடுக்கப்பட
வேண்டியது.
‘தமிழர்’
என்ற
அடையாளப்படுத்தல்
நவீனகால
உருவாக்கம்
என்பதே
தெளிவு. தமிழ்
இன
அடையாளப்படுத்தலுக்கு
முன்
சாதியரீதியான
அடையாளப்படுத்தல்
இருந்தது
என்பதும்
இங்கு
தெளிவாகின்றது.
எனவே தமிழ்த்
தேசியவாத
கருத்தியலின்
தொன்மைவாதம்
ஆய்வுக்குள்ளாக்கப்படும்
போது ஆட்டம்
காண்கிறது.
வெள்ளையர்களின்
காலனியாதிக்கக்
காலத்திற்கு
முன்னரே சாதி
அமைப்பு
இருந்தது
என்பதற்கு
ஆதாரங்களைத்
திரட்டத்
தேவையில்லை.
எனவே இந்த
கட்டுரையானது
தமிழத்
தேசியம்
குறித்துப்
பின்வரும்
நான்கு
அடிப்படை
விடயங்களைப்
பரிசீலிக்கின்றது.
(1)
காலனிய
காலகட்டத்தில்
ஆதிக்க
சாதியினர் -குறிப்பாக
வேளாளர்கள்-
எவ்வாறு தமது
அரசியல் - சமூக-
பொருளாதார
நிலைமைகளை
வலுப்படுத்தினார்கள்?
(2)
சுதந்திரம்
பெற்ற
காலத்திலிருந்து
1983 வரையான
தமிழத்
தலைமைகளின்
கோரிக்கைகளும்
அவற்றின்
சாதிய
பரிமாணமும்.
(3) 1983ற்குப்
பின்னான ஆயுத
அமைப்புகளின்
தோற்றமும்
சாதிய
பரிமாணமும்
(4) 1986ற்குப்
பின்னான
விடுதலைப்
புலிகளின்
சர்வாதிகார
அரசியலும்
சாதியமும்.
காலனித்துவ
காலகட்டம்:
போர்த்துக்கேயர்,
ஒல்லாந்தர்,
காலகட்டத்தில்
வரி
விதிப்பதற்காகவும்
அரசியல்
காரணங்களுக்காகவும்
ஏற்கனவேயிருந்த
சாதியடிப்படையில்
சனத்தொகையைப்
பகுத்தனர்.
தாழ்த்தப்பட்ட
மக்களை
அடிமைகள்
என்று
டச்சுகாரர்கள்
வகுத்தனர்.
இக்காலகட்டத்திலேயே
தாழ்த்தப்பட்டவர்கள்
நிலமற்றவர்களாக
ஆக்கப்பட்டனர்.
ஆதிக்க
சாதியினரின்
அதிகாரம்
மேலும்
வலுவாக்கப்பட்டது.
காலனித்துவ
காலத்திலும்
அதன்
பின்னும்
யாழ்ப்பாண
மத்தியதர
வர்க்கம் ‘உயர்’
சாதி
அடிப்படையிலேயே
தனது
ஆதிக்கத்தை
தக்கவைத்து
கொண்டது.
காலனித்துவத்திற்குப்
பின்னான
அரசியல்
அதிகாரப்
பகிர்வு
போட்டியில்
ஏற்கனவே தான்
காலனித்துவ
காலத்தில்
அனுபவித்து
வந்த
சலுகைகளும்
அதிகாரமும்
பறிபோய்விடுமென்ற
பயமே தமிழ்த்
தேசியவாதக்
கருத்தியலின்
அடிப்படை.
“காலனித்துவ
காலகட்டத்தில்
புதிய சமூக
அமைப்புக்கான
கருத்தியல்
தளமான
கல்விமுறை
அதன்
ஆரம்பத்திலேயே
ஏற்கனவே
ஆதிக்கத்தில்
இருந்த
சமுகக்
குழுக்களால்
குத்தகைக்கு
எடுக்கப்பட்டது…
இந்தச்
சக்திகளுக்குத்
தாங்கள்
பரம்பரையாக
ஆதிக்கத்திலிருக்கிறோம்
என்ற
பார்வையை
மாற்ற
வேண்டிய
எவ்வித
தேவையும்
இருக்கவில்லை”
என்கிறார்
அம்பேத்கர்.
காலங் காலமாக
ஆதிக்கத்திலிருந்த
யாழ்ப்பாணத்து
ஆதிக்க
சாதியினர்
ஆங்கிலக்
கல்வியைப்
பெற்றுத்
தமது
ஆதிக்கத்தைச்
சமூக,
பொருளாதார
ரீதியில்
மேலும்
வலுவாக்கிக்
கொண்டனர்.
ஏற்கனவே
உரிமைகள்
மறுக்கப்பட்டிருந்த
தாழ்த்தப்பட்ட
மக்களின்
ஜீவாதார
உரிமைகள்
காலனித்துவ
ஆட்சியாளர்களின்
நடவடிக்கைகளால்
மேலும்
நசுக்கப்பட்டன.
பிரித்தானிய
காலனித்துவம்
ஆதிக்க
சாதியினருடன்
சமரசம்
செய்துகொண்டு
அவர்களுக்கு
மேலும்
அதிகாரங்களை
வழங்கியது
பிரித்தானிய
காலனித்துவம்
மையப்படுத்தப்பட்ட
நிர்வாக
வசதிக்காக
அரசியல்
அமைப்பு
முறையை
அமுல்படுத்தியதும்
இந்த நிர்வாக
அலகுகளை
இயக்குவதற்காக
‘கிளாக்கர்களை’
உள்ளுரிலிருந்து
தேர்ந்தெடுத்ததும்
வரலாறு. இன்று
தேசியவாதத்தின்
பீஷ்மரான கா.சிவத்தம்பி
தனது முன்னைய
ஆய்வொன்றில்
“காலனித்துவம்
ஏற்கனவே
சாதியால்
வரையறுக்கப்பட்டிருந்த
சமுக
ஒழுங்கைக்
குலைக்க
முயலவில்லை.
மாறாக ஆதிக்க
சாதியினரை
முதன்மைப்படுத்துவதன்
மூலம் தனது
இருப்பை
தக்கவைத்து
கொண்டது.
குறிப்பாக
யாழ்ப்பாணத்தில்
ஆதிக்க
சாதியாயிருந்த
வெள்ளாளரை
ஆங்கிலக்
கல்வி கற்க
வைத்துத்
தனது
கிளாக்கர்
படையை
நிறுவியது…யாழ்ப்பாணத்தில்
கல்விக்கூடங்களின்
தொகையும்
அதனால்
உருவாக்கப்பட்ட
அரச
அலுவலர்களது
தொகையும்
அதன்
சனத்தொகை
வீதாசாரத்துடன்
ஒப்பிடும்போது
அதீதமானது”
என்கிறார்.
காலனித்துவப்
பொருளாதார
அமைப்பானது
உற்பத்தியை
மையமாகக்
கொண்டிருந்தது.
இந்தக்
காலகட்டத்தில்
‘உயர்’
சாதியினர்
ஆங்கிலத்தைக்
கற்றுக்கொள்ள
ஊக்குவிக்கப்பட்டுப்
பெருவாரியாக
அரச அலுவலகப்
பதவிகளில்
அமர்த்தப்பட்டனர்.
காலனிய அரசு
நிறவாத அரசாக
இருந்ததால்
சாதிரீதியான
பிரிவினைகளை
மாற்றக்கூடிய
அரசியல்
தார்மீகப்
பலம் அதற்கு
இருக்கவில்லை.
கிறிஸ்தவ
மதம்
யாழ்ப்பாணத்தில்
சாதிப்பிரிவினைகளை
உள்வாங்கி
கொண்டது
இதற்கு நல்ல
உதாரணம்.
ஒருசில
பாதிரிமாரும்
நிறுவனங்களும்
கல்விக்
கூடங்களைத்
தாழ்த்தப்பட்ட
மாணவர்களிற்குத்
திறந்து
விட்ட போதும்
சாதிய
முரண்பாடுகளில்
ஆதிக்க
சாதியினரின்
விருப்புகளிற்கு
காலனித்துவ
அரசு
விட்டுக்கொடுத்தே
வந்தது. சமுக
மாற்றத்தைக்
காலனிய அரசு
விரும்பவில்லை.
அது தனது
இருப்புக்கு
ஆபத்தாகலாம்
எனக்
காலனித்துவ
அரசு
கருதியிருக்க
இடமுண்டு.
யாழ்ப்பாணத்து
ஆதிக்க
சாதியினரின்
இருப்பிற்கு
சைவ
சித்தாந்தக்
கருத்தியல்
நியாயம்
கற்பித்தது.
வர்ணாசிரம
தர்மத்தின்படி
சூத்திரர்களாக
வரையறுக்கப்படும்
சாதி
வெள்ளாளர்கள்
யாழ்ப்பாணத்து
சமூக
அமைப்பில்
ஆதிக்கம்
செலுத்தியதோடு
அதற்கான
சித்தாந்தத்தையும்
வகுத்தனர்.
அவர்கள்
தாழ்த்தப்பட்ட
மக்கள் திரளை
குடிமை, அடிமை,
சிறைக்குட்டிகள்
என்ற
வகைகளிற்குள்
அடக்கினர்.
நிலங்கள்,
கோயில்கள்
அனைத்தும்
பெருமளவில்
வெள்ளாளர்களின்
சொத்தாகவே
இருந்தன.
புறநடையாகக்
கரையார்கள்
மட்டும்
வெள்ளாளருக்குப்
போட்டி
சாதியாக
இருந்து
வந்தனர். இது
பற்றிய ஆய்வு
தனியாக
மேற்கொள்ளப்பட
வேண்டியது.
சாதிய
இறுக்கம்
காலனித்துவ
காலத்தில்
நெகிழ்ந்து
வருவதையும்
கிறிஸ்தவ
மதமாற்றங்கள்
சாதிய
கட்டுமானத்தைச்
சற்றுச்
சலனப்படுத்துவதையும்
கண்ட
வெள்ளாளச்
சமூகம் தனது
சாதிய நலனை
ஆறுமுக
நாவலரிடம்
அடையாளம்
கண்டது.
ஆறுமுக
நாவலரின சைவ
சித்தாந்தம்
சாதிய
வேறுபாட்டை
நியாயப்படுத்தியது.
இந்தியாவில்
இந்து
சமயத்திற்குள்
சீர்சிருத்தம்
செய்யப்
புறப்பட்டுச்
சாதியை
ஒழிக்க
முயன்ற
வள்ளலார்
போன்ற
ஆன்மீகவாதிகளை
நாவலர்
எதிர்த்து
வள்ளலாரின்
பாட்டு ‘மருட்
பா’ என
வாதிட்டார்.
சாதியத்தை
இறுக்கமாக
பேணுவதற்கான
வழிமுறைகளை
நாவலர்
சைவசித்தாந்தத்தின்
மூலம் வழி
மொழிந்தார்.
சைவ
சித்தாந்தம்
கூறுகிறது:
“எவர்கள்
இடத்திலே
போசனம்
பண்ணல் ஆகாது?
தாழ்ந்த
சாதியர்
இடத்திலும்
கள்ளுக்
குடிப்பவர்
இடத்திலும்
மாமிசம்
புசிப்பவர்
இடத்திலும்
போசனம்
பண்ணல் ஆகாது.”
நாவலர்
கிறிஸ்தவ
மதமாற்றத்தை
எதிர்த்தது
அந்த மதம்
சம்பந்தமான
வெறுப்பாலல்ல.
அது சாதியக்
கட்டுமானத்தைக்
குலைத்துவிடும்
என்ற
பயத்தால்தான்.
தனது
பாடசாலையில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு
அனுமதி
மறுத்த
நாவலர்
ஏதாவது ஒரு
பாடசாலையில்
தாழ்த்தப்பட்ட
மாணவன்
ஒருவன்
அனுமதிக்கபட்டால்
அதற்கு
எதிராகவும்
கொக்கரித்தார்.
“பறை பஞ்சமர்,
பெண்கள்
அடிப்பதற்காகவே
பிறந்தார்கள்”
என்றார்
நாவலர். இந்த
சைவ
சித்தாந்தக்
கருத்தியலின்
அடிப்படைதான்
இன்றைய
தமிழத்
தேசியவாதததின்
தோற்றமும்
வளர்ச்சியும்.
சாதி
அமைப்புமுறை
ஆதிக்க
சாதிகளால்
தொடர்ந்தும்
இறுக்கமாகப்
பேணப்பட்டு
வரும்
அதேவேளையில்
தங்களது
நலன்களைத்
தொடர்ந்து
பேணிக்காக்கவே
யாழ்ப்பாண
மேலாதிக்க
சமூகம்
தேசியவாதத்தை
அரசியல்
கருத்தியலாக
விதைத்தது.
காலனித்துவ
அரசுகள்
படிப்படியாக
சரிந்து
வரும்
காலத்தில்
பிரித்தானிய
காலனித்துவ
அரசு
காலனித்துவத்திற்கு
எதிராக
பெரும்
போராட்டம்
நிகழ்த்தாமலே
சுதந்திரம்
பெற்ற
இலங்கையை ஒரு
‘மாதிரி’
நாடாக, ஒரு ‘சக்சஸ்
ஸ்டோரி’யாகப்
பார்த்தது.
தாங்கள்
வெளியேறுவதற்கு
முன்பாகச்
சில
திட்டங்களையும்
பரிந்துரைத்து
சுதேசிகளுக்கு
ஆட்சிக் ‘கலை’யைக்
கற்றுக்கொடுத்தது.
இந்தக்
காலகட்டம்
காலனித்துவ
அரசு பல்வேறு
சீர்திருத்தங்களைக்
கொண்டு வந்த
காலம்.
டொனமூர்
கொமிஷன்
சுதேசிகளின்
அதிகாரத்தைப்
பற்றிப்
பேசிய காலம். ‘தமிழர்’
தமக்குப்
போதிய
அதிகாரம்
வேண்டுமென்ற
காலம். தமிழத்
தேசியவாதிகளின்
கருத்தின்படி
தமிழர் தம்மை
ஒரு
தனித்துவமான
இனமென்று
கூறி
அதிகாரப்
பகிர்வு
கேட்ட காலம்.
ஆனால்
காலனித்துவத்துக்கு
முற்பட்ட
காலத்திலிருந்தே
அடக்கப்பட்டு
வந்த
இழிநிலைக்குத்
தள்ளப்பட்ட
தாழ்த்தப்பட்ட
மக்களின்
நலன்களைப்
பற்றித்
தமிழ்த்
தலைமை
மூச்சும்
காட்டவில்லை.
1944ல் “நூற்றாண்டு
காலமாக
யாழ்ப்பாணச்
சமூகம்
மிசனரிகளாலும்
அரச
நடவடிக்கைகளாலும்
பயன்பெற்றுக்
கல்வியில்
முதன்மையாக
நிற்கின்றது’
என்று
அறிக்கையிட்டது
சோல்பரிக்
கொமிஷன்.
ஆனால் அந்தக்
கல்வியை
பெறத்
தடுக்கப்பட்டவர்களாகவே
தாழ்த்தப்பட்ட
மக்கள்
இருந்தார்கள்.
சோல்பரிக்
கொமிஷனிடம் ‘இருக்கும்
கல்விக்
கூடங்கள்
போதாது
இன்னும்
கல்விக்கூடங்கள்
வேண்டும்’
என்று கேட்ட
யாழ்ப்பாணத்
தலைமை
மறுபுறத்தில்
தாழ்த்தப்பட்ட
மாணவர்கள்
கல்விகற்ற
படித்த
பாடசாலைகளை
எரித்துச்
சாம்பராக்கியது.
இந்த
காலத்திலே
தாழ்த்தப்பட்ட
மக்கள்
தங்கள்மீது
சுமத்தப்பட்ட
தமிழ்த்
தேசியப்
பெருங்கதையாடலை
நிராகரித்தனர்.
‘ஒடுக்கப்படும்
தமிழ் ஊழியர்
சங்கமம்’ 1927ல்
உருவாக்கப்பட்டது.
சங்கம்
தாழ்த்தப்பட்ட
மாணவர்களிற்கு
பாடசாலை
அனுமதியும்
சமபந்தியும்
கோரிப்
போராட்டங்களை
நிகழ்தியது. 1931
இல் சர்வசன
வாக்குரிமைக்கு
டொனமூர்
கொமிசன்
சிபார்சு
செய்தபோது
பொன்.
இராமநாதன்
நடேசன் போன்ற
தமிழ்த்
தலைவர்கள்
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும்
அரசியல்
உரிமையொன்று
கிடைப்பதைப்
பொறுக்க
முடியாமல்
சர்வசன
வாக்குரிமையை
எதிர்த்தனர்.
அவர்களின்
எதிர்ப்பு
அவர்களின்
ஆதிக்கசாதி
நலனிலிருந்தே
முகிழ்த்தது.
ஆனால் இன்றைய
தமிழ்த்
தேசியவாதிகளோ
‘பெரும்பான்மைச்
சிங்களவரகள்
ஆட்சிக்கு
வந்துவிடுவார்கள்
என்ற
தூரப்பார்வை
இத்
தலைவர்களுக்கு
இருந்ததனால்
அவர்கள் அதனை
எதிர்த்தார்கள்’
என
வியாக்கியானம்
கொடுக்கிறார்கள்.
நிலப்பிரபுகளுக்கு
மட்டுமே
வாக்குரிமை
வழங்கவேண்டும்,
கல்வியற்றவர்களுக்கும்
பெண்களுக்கும்
அந்த உரிமை
இல்லை என்று
வாதாடினார்
இராமநாதன்.
ஆனால் சிங்கள
நிலப்பிரபுக்கள்
எண்ணிக்கையில்
தமிழ்
நிலப்பிரபுக்களை
விட அதிகம்.
எனவே சர்வசன
வாக்குரிமை
இல்லாவிடினும்
சிங்களப்
பெரும்பான்மையே
அதிகாரத்தைக்
கைப்பற்றியிருக்கும்.
தவிரவும்
இராமநாதன்
சிங்கள
மேல்தட்டு
வர்க்கத்துடன்
சுமூகமான
உறவை
வைத்திருந்ததுதான்
வரலாறு. எனவே
இங்கே
இராமநாதனின்
‘தூரப்பார்வை’
என்ற வாதமே
அடிபட்டுப்போகிறது.
தாழ்த்தப்பட்ட
மக்கள்
தங்களைத்
தமிழ்த்
தேசிய இனமாக
அடையாளம் காண
மறுத்தனர்.
யாழ்ப்பாணத்து
‘உயர்’சாதிக்காரரின்
அரசியல்
அதிகாரப்
போட்டிகளின்
விளைவே தமிழ்
தேசியவாதக்
கருத்தியலின்
உள்ளுறை
என்பதை
அவர்கள்
புரிந்து
வைத்திருந்தனர்.
அதிகாரப்
பகிர்வு
கேட்கும் அதே
வர்க்கம்
தாழ்த்தப்பட்டவர்களிற்கு
அரசால்
வழங்கப்பட்ட
சிறிய
சலுகைகளை கூட
மூர்க்கமாக
எதிர்த்து
வந்ததைத்
தாழ்த்தப்பட்ட
மக்கள்
நன்கறிவார்கள்.
தங்களுக்கு
இவர்கள்
கொடுத்த
அடையாளம்
சாதி
அடையாளமே
தவிர தமிழ்
அடையாளமல்ல
என்பது
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு
தெரியும். 1943ல்
வட இலங்கைச்
சிறுபான்மைத்
தமிழர்
மகாசபை
உருவாக்கப்பட்டதும்
இதன்
பின்னணியில்தான்.
அடுத்த
வருடமே
மகாசபை அகில
இலங்கைச்
சிறுபான்மை
தமிழர்
மகாசபையானது.
1944ல்
சோல்பரி
கொமிசனின்
முன்னால்
தனியான ஓர்
அறிக்கையை
மகாசபை
சமர்ப்பித்தது.
சிறுபான்மைத்
தமிழர்களின்
அடிப்படைப்
பிரச்சனைகள்
வேறானவை,
அவர்கள்
தமிழ்த்
தேசியம் என்ற
ஒற்றை
அடையாளத்திற்குள்
அடங்கமாட்டார்கள்
என மகாசபை
வலியுறுத்தியது.
தங்களது
உரிமைகளைச்
சாசனரீதியாக
உத்தரவாதப்படுத்தப்பட
வேண்டும்
எனவும்
மகாசபை
வலியுறுத்தியது.
அய்ம்பதிற்கு
அய்ம்பது
கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம்
“தீண்டாமை
ஒழிக்கப்படவேண்டும்,
பாடசாலை
அனுமதி
தரப்படவேண்டும்
போன்ற
கோரிக்கைகள்
தமிழ்க்
காங்கிரஸ்
சமர்பிக்கும்
அறிக்கையில்
உள்ளடக்கப்பட்டால்
தனி
அறிக்கையொன்றைத்
தாங்கள்
சோல்பரிக்
கொமிஷனிடம்
சமர்ப்பிக்கவிருப்பதைக்
கைவிடுவதாக”
மகாசபை
தெரிவித்தது.
ஆனால் ஆதிக்க
சாதியினரின்
பிரதிநிதியான
பொன்னம்பலம்
தாழ்த்தப்பட்ட
மக்களின்
நியாயமான
கோரிக்கைகளைப்
புறக்கணித்ததால்
மகாசபை
தனியாகவே
கொமிஷனிடம்
தனது
அறிக்கையைச்
சமர்ப்பித்தது.
தமிழ்த்
தலைமையானது
சாதி
வெறியர்களுடன்
கூட்டு
சேர்ந்து
மகாசபை
அங்கத்தவர்களை
மிரட்டியது.
சோல்பரிக்
கொமிஷன்
அங்கத்தவர்களை
இரகசியமாக
தலித்
மக்களின்
குடியிருப்புகளிற்கு
அழைத்துச்
சென்று
தாழ்த்தப்பட்ட
மக்கள்
எவ்வாறு
இழிவாக
நடத்தப்படுகிறார்கள்
என்று மகாசபை
உறுப்பினர்கள்
காண்பித்தார்கள்.
ஆனாலும்
தமிழ்
அரசியல்
தலைமைகளின்
சாதி
அரசியலால்
தாழ்த்தப்பட்ட
மக்களின்
கோரிக்கைகள்
கிணற்றில்
போட்ட
கற்களாயின.
சுதந்திரம்
பெற்ற
காலகட்டத்திலிருந்து
1983 வரையான
தமிழ்த்
தலைமைகளின்
கோரிக்கைகளும்
அவற்றின்
சாதியப்
பரிமாணமும்:
பொருள்
உற்பத்திமுறைமை,
அதற்கான
அரசியல்
சமூகக்
கட்டுமானம்,
அதனை வழி
நடத்துவதற்கான
நிர்வாக
இயந்திரம்
என்ற
அடிப்படையிலேயே
இலங்கையில்
காலனித்துவ
அரசு தனது
சுவடுகளை
விட்டு
சென்றது.
காலனியாதிக்க
காலத்திலேயே
அரச நிர்வாக
சேவைகளில்
தமது கால்களை
ஆழ
ஊன்றியிருந்த
யாழ்
மத்தியதர
ஆதிக்கசாதி
வர்க்கத்திற்கு
மட்டுப்படுத்தப்பட்ட
வாய்ப்புகளே
இச்சூழலில்
இருந்தன.
தொழில்
வளர்ச்சியற்ற
இச்சூழலில்
மட்டுப்படுத்தப்பட்ட
வாய்ப்புகளுக்கான
போட்டி
இனரீதியான
சிந்தனைக்குத்
தீனி போட்டது.
கல்வி
மறுக்கப்பட்டு
அரசு
நிர்வாகப்
பதவிகள்
மறுக்கப்பட்டு
வந்த
தாழ்த்தப்பட்ட
மக்கள் இந்த
போட்டியின்
பங்குதாரரில்லையென்பதுதான்
உள்ளங்கை
நெல்லிகனி
உண்மை. தனிச்
சிங்கள
மொழிச்
சட்டம் 1956ல்
நிறைவேற்றப்பட
முன்பு
ஆங்கிலக்
கல்வியே
சமூகப்படிகளில்
ஏறுவதற்கான
கருவியாக
இருந்தது. ‘ஆங்கிலக்
கல்வி
வேண்டாம்,
தாய்மொழிக்
கல்வி
வேண்டும்’ என
யாழ்ப்பாண
அரசியல்
தலைமை
அதுவரையும்
போராடவில்லை.
தனிச்
சிங்களச்
சட்டம்
அமுலுக்கு
வந்து
பின்னர்
தமிழ்
வடக்குக்
கிழக்கில்
நிர்வாக
மொழியாக
பயன்படுத்தப்படும்
என மாற்றம்
கொண்டுவரப்பட்டது.
பின்னர்
தாய்மொழிக்
கல்வி
அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால்
தொ&